கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் மருங்கில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் சீதுவை பிரதேசத்தில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியின் 18 மற்றும் 19 ஆம் கிலோ மீற்றர் தூண்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீப்பரவல் காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை மூட்டம் பிரதேசம் முழுவதும் பரவியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.