ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். Read more