Header image alt text

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். Read more

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில், நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பஸ்சும் வேனும் தீப் பற்றி எரிந்துள்ள நிலையில், தீயானது தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் எதிர்வரும் 25ம் திகதி (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் நேற்று முன்தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் காலை முதல் மன்னார் நகர சபை முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் (வயது-39) என்பவரே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், Read more