மன்னாரில் எதிர்வரும் 25ம் திகதி (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் நேற்று முன்தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் குறித்த போராட்டமானது மன்னார் நகர மண்டபத்தின முன் ஆரம்பமாகி மன்னார் சதொச மனித புதைகுழிக்கு அருகில் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும்.

இந்த போராட்டத்தின்போது சதொச வளாக புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் நீதியான விசாரணை நடத்தக் கோரியும் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தியும் அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை நேரடித் தலையீட்டை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகளில் தாமதம்-

சில ரயில் சேவைகள் இன்று காலை தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொல்கஹவெல மற்றும் அலவ்வ இடையிலான ரயில் பயணத்தில் 7 – 8 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.