வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியவர்கள், இன்றைய தினம், வடக்கு மாகாண சபைக்கு முன்னால், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்று வரை கடமை பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதாரத் தொண்டர்களே, இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.