uஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (01.03.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் இன்றைய அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல், வேட்பாளர்கள் என்பன குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உப தலைவர்கள் ஜி.ரி. லிங்கநாதன், வே.நல்லநாதர், பொ.செல்லத்துரை மற்றும் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.