எட்டாவது நாடாளுமன்றம் நேற்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடும் அதிவிசேட வர்த்தமானி நேற்றிரவு வௌியிடப்பட்டது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இடம் ஆகியன தொடர்பிலான வர்த்தமானி இன்று (03) வௌியிடப்படவுள்ளது.