இலங்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.இத்தாலியை வசித்து வரும் 46 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வௌியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண் தற்போது பிராசியாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனவும் வௌியுறவு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவராவார்.