பொது விடுமுறையை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறும் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் பரவிவருகின்ற கொரோன வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.