கொரோனா வைரஸ் காரணமாக, நேபாளத்தின் கல்வி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 100 பேர் நாட்டுக்கு திரும்பி வரமுடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேபாளம்- பொக்காராவில் அமைந்துள்ள மனிபாய் வைத்திய நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் 88 மாணவர்களும் காத்மண்டு வைத்திய நிறுவனமொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளடங்களாக 100 மாணவர்கள் இலங்கைக்கு வரமுடியாமல் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ளனரென தெரிவிக்கப்படுகின்றது.