இலங்கையில் மேலும் 1 கொரோனா வைரஸ் தொற்றாளர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் 143 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், நேற்று (31) மாத்திரம் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.