மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் 2,489 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 305 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.