கொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.ஏற்கெனவே 156 பேர் இந்த தொற்றால் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 24 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.