19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்த பட உள்ள நிலையில் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.இதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 10 ஆம் வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் வாரமாக தனியார், அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது