கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரைஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.