கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3,668 வகை மருந்து பொருட்களைதாங்கிய சரக்கு விமானம் நேற்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த மருந்து பொருட்களை தாங்கிய ஏ.ஐ – 281 ரக விமானம் பிற்பகல் 2.36 அளவில் புதுடெல்லியில் இலங்கையை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருந்து பொருட்கள் இந்திய அதிகாரிகளால் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.