மேலும் ஒருவருக்கு தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 242ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன்,  7 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.