ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் நாளை (20) பஸ்,ரயில் சேவைகள் இடம்பெறாதென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கேகாலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (20) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.