கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனையடுத்து, தற்போது வரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை நூறானது.

இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 202 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.