இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த 11 பேரும் பேருவளை பகுதியில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாட்டில் இதுவரை 321 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். .

இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை 104 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 100 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.