பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளை (04) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துக் கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்று வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி இதனை தெரிவித்துள்ளது.

பிரதமர் கடந்த பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும் நாளை விசேட கலந்துரையாடலுக்கு அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இதற்கு முன்னர் நாளைய கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது நாளைய கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் சகல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழலில் அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட முடியாது எனவும் அதனால் குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள போவதில்லை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து பணிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.