bசஹ்ரான் ஹாசிம் மற்றும் முஹம்மத் இப்ராஹீமின் புதல்வர்கள் இருவர் கருத்தரங்கு நடத்திய அமைப்பின் பொறுப்பாளர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று மாலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசார் நகர் பகுதியில் உள்ள குறித்த அமைப்பின் மத்திய நிலையத்தை சுற்றிவளைக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.