புதிதாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 538 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 434 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.