கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது.இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.