ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு.க.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில், கட்சியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு. வே.குகதாசன் அவர்களின் தலைமையில் செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான இடர் நிவாரணப் பொருட்கள் (21/05/2020) காலை அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிவாரணப் பொருட்களுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) ஜேர்மன் கிளைத் தோழர்கள் வழங்கி வைத்திருந்தனர்.

இவ் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான திரு. சு.காண்டீபன், கட்சியின் தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு. த.யோகராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.