Header image alt text

இலண்டனில் தங்கியிருந்த  221 இலங்கையர்கள் விசேட விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவைப்படும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார். Read more

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஜூன் முதலாம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 9 பேரில் 6 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.