இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று (மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

கோவிட் -19 தொற்று நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் நேற்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றுக்கான விநியோகத் தேவைகளை பூர்த்திச் செய்து நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தொற்றுநோய்களின் கீழ் அனைத்து நிலையான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டனர்.

கப்பல்கள் இன்று 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து செல்லவுள்ளன.