நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேர் நேற்று (31) இனங்காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1633 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 09 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஏனைய நால்வர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 801 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.