நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (10) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய இருவரும் கட்டார்  மற்றும் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 736 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 1122 பேர் பூரண குணமடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.