Header image alt text

பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ​தெரிவித்துள்ளார்.

குறித்த அனுமதி கிடைத்தால் மாத்திரம் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை நாட்டிற்குள் அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 1889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  11 பேர் உயிரிழந்துள்ளனர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சகல மிருக காட்சிசாலைகளும் நாளை (15) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றி மிருக காட்சி சாலைகளை திறக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சகல மிருக காட்சிசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால். நாட்டிலுள்ள சகல மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை நாளை (15) முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் மிருகக்காட்சிசாலைகள் மற்றும் தேசிய பூங்காக்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று (14) முதல் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வந்தது. Read more

இலங்கையில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 1884 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more