இலங்கையில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரை 1884 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1252 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 4 பேரில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் எனவும் மற்றைய 2 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக இனங்காணப்பட்ட நபர் சென்னையில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.