கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை 5.35 மணியளவில் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.226 ரக விசேட விமானம் மூலம் குறித்த பயணிகள் கட்டுநாயக்க விமானம் நிலையம் வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த குறித்த பயணிகள் சுகாதார அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 4 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.