நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.