Header image alt text

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குறித்த நபருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். Read more

வெலிசறை கடற்படை முகாமை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வெலிசறை கடற்படைத்தளம் மூடப்பட்டது.

இந்த நிலையில், பல கட்டங்களின் கீழ் இந்த தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 26 பேர், இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1472 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. Read more

ஒரே மாதத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் அகால மரணம் அடைந்திருப்பது யாழ். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்து கொண்டதுடன், ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, வெளியிடங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். Read more

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதம் பின்வருமாறு….. Read more

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். Read more

நேற்றைய தினம் புதிதாக மூன்று கொவிட் 19 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது. Read more