ஒரே மாதத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் அகால மரணம் அடைந்திருப்பது யாழ். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்து கொண்டதுடன், ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, வெளியிடங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர்.

இதில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் யாழ்.நல்லூர், அரசடி வீதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் என்பவர் கடந்த 03 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்திருந்தார்.

ஜெயமூர்த்தி நிஷாந்த்
இவரின் உயிரிழப்பு ஒரு புறம் இருக்க, ஏனைய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கைச் சேர்ந்த நமசிவாயம் டயஸ் (வயது-26) என்பவர் கடந்த 16 ஆம் திகதி மாதம்பை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கே.கமலராஜ்
அத்துடன் நேற்றைய தினம் (19) அரச புனலாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் மத்தியைச் சேர்ந்த கே.கமலராஜ் (வயது-21) என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கல்முனை தலைமைப் பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.