மலர்வு- 20.10.1940 உதிர்வு-20.06.2020
மன்னார் நானாட்டான் கட்டைக்காட்டை பிறப்பிடமாகவும் முருங்கன்பிட்டி கன்னாட்டியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. மனுவேல் மரியம்மா அவர்கள் நேற்று (20.06.2020) சனிக்கிழமை காலமானார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மன்னார் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவு பொறுப்பாளர் அமரர் பெஞ்சமின் (தோழர் செல்வம்) அவர்களின் தாயார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது கன்னாட்டி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றுமாலை 3மணியளவில் சிறுகண்டல் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்புக்கு: 774403664 (கொன்சால்)