எதிர்வரும் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி ஆகிய நாள்களில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் நாளை (23) இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி அதிகாலை 05 மணிக்கு நிக்கப்படும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வழமை போன்று ஊரடங்கு அமுலில் இருக்கும்.