வவுனியா – பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மன்னார், எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது மோட்டார் வாகனத்தை புகையிரத பாதையின் அருகில் நிறுத்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.