விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.  அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தான் கொரோனாவை விட பயங்கரமானவர் எனவும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டாயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.