சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீசெல்ஸ் நாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.  இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.