தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலில் இடுவதற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கின்றது.  இந்நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேருக்கு மாத்திரம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.