பொது இடங்களில் முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இன்று காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.