Header image alt text

மேல் மாகாணத்தில் முக கவசம் அணியாத நபர்கள் ஆயிரத்து 280பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 அளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை நேற்று இரவு 9.30அளவில் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து,  கடந்த மார்ச் 20ம் திகதி தொடக்கம் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது. Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை, ஆகஸ்ட் 15ம் திகதி வரை தாமதப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், இதுவரை வெளிநாடுகளில் உள்ள 50,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இலங்கை வருவதற்கு Read more

வவுனியா – கண்டி வீதியில், இன்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்ற விபத்தில், வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற வாகனம், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சைக்கிளுடன் மோதுண்டு, வீதியருகே இருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, சைக்கிளை ஓட்டிச் சென்ற மகேஷ்வர ரட்ணசிங்கம் (வயது 59) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 22 பேர் இன்றையதினம் பூரண குணமடைந்துள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 2034 ஆக அதிகரித்துள்ளது. Read more

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,  ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்பு, கடந்த பத்தாண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவந்த தமிழர்களின் போராட்ட வழிமுறைகள் எதிர்பார்த்த அளவு பலனை எமது மக்களுக்கு கொடுக்கவில்லை. Read more

தாவடி கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கலந்துரையாடல்… Read more

கோப்பாய் மற்றும் புத்தூர் பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள்…. Read more