தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்)  மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் திரு. முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்றுகாலை 10மணியளவில் மட்டக்களப்பு நாவற்குடாவில் திறந்துவைக்கப்பட்டது.வேட்பாளர் திரு. முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கி.துரைராஜசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு காரியாலயத்தினைத் திறந்துவைத்தார்.

நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. உதயகுமார் (மாவட்ட முன்னாள் அரச அதிபர்), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் உபதலைவர்களுள் ஒருவரான பொ.செல்லத்துரை(கேசவன்), கட்சியி;ன் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா (சூட்டி), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ந.ராகவன், கா.கமலநாதன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.