மலர்வு- 19.01.1938 உதிர்வு-22.07.2020
மன்னார் முருங்கன்பிட்டி பள்ளக்கமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் மனுவேல் அவர்கள் நேற்று (22.07.2020) புதன்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மன்னார் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவு பொறுப்பாளர் அமரர் பெஞ்சமின் (தோழர் செல்வம்) அவர்களின் தந்தையார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
குறிப்பு: அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது முருங்கன்பிட்டி பள்ளக்கமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றுமுற்பகல் 11 மணியளவில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று சிறுகண்டல் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தொடர்புக்கு: 0774403664 (கொன்சால்)