வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறை ஒன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வலதுகுறைந்தோர் இரசியத் தன்மையை பேணி வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் நாளை மறுதினமும் தபால் அலுவலகங்களை நாடி அதனை பெற முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபாலகங்களுக்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.