இலங்கையில் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு இன்றைய தினம் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 14 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2593 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 263 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது