இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோானா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்க்கை 2888 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 8 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 2666 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 211 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.