நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 79 பேர், பூரணமாக குணமடைந்து இன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,755 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 134 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், இலங்கையில் இதுவரை 2900 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.