கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விவரம் அரசாங்கத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.