வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் நான்கு இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2951 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கென்யாவில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இதுவரை 2805 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.